Breaking News
எல்லையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் நேற்று 2 தீவிரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஷ்மீரின் உரி செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானின் எல்லை ரோந்துப் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை நமது ராணுவ வீரர்கள் முறியடித்தனர். மேலும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்தனர். இதில் எல்லையில் ஊடுருவக் காத்திருந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார்.

உரி செக்டார், எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுப் பகுதியில் சர்ச்சைக் குரிய பகுதியில் 2 தீவிரவாதிகளின் உடல்களும் கிடப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.