Breaking News
செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கி வழிந்த முதல்வர்

கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர் சந்திப்பின்போது தூங்கி வழிந்தது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக காங்., சார்பில் பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் கர்நாடக காங்., பொறுப்பாளர் வேணுகோபால், பா.ஜ.,வைக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மாநில முதல்வர் சித்தராமையா, தூங்கி விழுந்தார். அவர் தூங்கி வழிந்தது ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

பொது இடங்களில் சித்தராமையா தூங்கி வழிவது இது முதல்முறையல்ல. கடந்த 2014 ஜூலையில் சட்டசபையிலும், 2015 ஏப்ரலில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் சித்தராமையா தூங்கியது அப்போது தலைப்பு செய்தியானது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.