Breaking News
உத்தரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை: நடுரோட்டில் நடந்து சென்ற 2 பெண்களை மானபங்கம் செய்த 14 சிறுவர்கள்

உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில 2 பெண்கள் நடுரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த 14 சிறுவர்கள் 2 பெண்களை வருவதை பார்த்து கேலி கிண்டல் செய்தனர். மேலும் அந்த 2 பெண்களை கையை பிடித்து தகாத முறையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தங்களை விட்டு விடும்படி சிறுவர்களிடம் கண்ணீருடன் கெஞ்சி கேட்டுகொண்டிருந்தனர்.

மேலும் அந்த பெண்களை பல இடங்களில் சீண்டி தகாத முறையில் சிறுவர்கள் ஈடுபட்டனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் அந்த பெண்கள் கதறி அழுதனர். இந்த சம்பவத்தை அந்த சிறுவர்களில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு ஒரு சிறுவனை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசாரிடம் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் காரில் சென்ற 4 பெண்களை கொள்ளை கும்பல் ஒன்று கற்பழித்தது. இதை தடுக்க முயன்ற உறவினர் ஒருவரையும் அவர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.