Breaking News
ரமலான் நோன்பு இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்நாட்டிலும் மற்ற சில வெளிமாநிலங்களிலும் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் நேற்று தென்படவில்லை. அப்படி பிறை தென்படாத சூழ்நிலையில், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியை நோன்பின் முதல் நாளாக கருதலாம். அந்த வகையில் இஸ்லாமியர்கள் இன்று 28-ந் தேதியன்று ரம்ஜான் நோன்பைத் தொடங்குகிறார்கள்.

இதனால் ரமலான் மாதத்தின் முதல் தேதியை நோன்பு துவங்கும் முதல் தேதியாக கருதி, இன்று முதல் ரமலான் நோன்பை இஸ்லாமிய மக்கள் தொடங்குகின்றனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் இன்று அதிகாலை இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகைள் நடத்தினர்.

இந்நிலையில் ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனித மாதம் உலகமெங்கும் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலவட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.