Breaking News
மது பார் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை

உ.பி.யில் மதுபார் ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உபி.யில் பா.ஜ. தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், பா.ஜ. நிர்வாகியாக உள்ளார். நேற்று லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய பார் ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார்.
இது பெரும் சர்ச்சைஏறை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்ளிலும் வைரலாக பரவியுள்ளது.காங். கட்சியினர் கூறுகையில், பா.ஜ.வின் உண்மையான முகம் தெரிந்துவிட்டதுஎன குற்றம்சாட்டியது.
இது குறித்து விரிவான அறிக்கை தருமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.