Breaking News
ரேஷன் கார்டுக்கு ரூ.1,000 : ‘பிரவுசிங் சென்டர்’கள் வசூல்

புதிய ரேஷன் கார்டுக்கு, இணையதளத்தில் விண்ணப்பித்து தர, ‘பிரவுசிங் சென்டர்’ நடத்துவோர், 1,000 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. புதிதாக அந்த கார்டை பெறுவதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த பணிகளை செய்து தர, பிரவுசிங் சென்டர்களை நடத்துவோர், 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதால் தான், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதில், இணையதள முறை கொண்டு வரப்பட்டுள்ளது; அதன் மூலம், அரசு இ – சேவை மையங்களில், 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பிரவுசிங் சென்டர் நடத்துவோர், மக்களின் அறியாமையை பயன்படுத்தி, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, 1,000 ரூபாய்; ஏற்கனவே உள்ள கார்டில் புகைப்படம் பதிவேற்ற, 100 ரூபாய்; முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு, தனித்தனி கட்டணம் வசூலிப்பதாக, அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. அவர்களிடம் பணம் கொடுத்து, யாரும் ஏமாற வேண்டாம். அரசு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச, ‘லேப் – டாப்’ வழங்கியுள்ளது. அவர்கள் உதவியுடன், மக்கள் குறைந்த செலவில், இணையதளத்தில் ரேஷன் கார்டு தொடர்பான பணிகளை பெறலாம்.

அதிக பணம் வசூலிக்கும் பிரவுசிங் சென்டர்கள் மீது, தகவல் தொழிற்நுட்பத் துறை உதவியுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.