Breaking News
தர வேண்டியது 192; தந்தது 69 டி.எம்.சி.,

வரலாற்றில் முதல் முறையாக, கர்நாடகா, 2016 – 17ம் ஆண்டில் தான், மிக குறைந்தபட்சமாக, 69 டி.எம்.சி., நீர் மட்டும் வழங்கியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடகா, ஆண்டுதோறும் ஜூன், 1 முதல் மே, 31 வரை, 192 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணைக்கு வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 1 முதல், நேற்று வரை, 69, டி.எம்.சி., நீர் மட்டும் விடுவித்துள்ளது. மேட்டூர் அணை கட்டிய பின், கர்நாடகா, 2016 – 17ம் ஆண்டில் தான் மிக குறைந்த நீரை, தமிழகத்துக்கு விடுவித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை மட்டுமின்றி, சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.