Breaking News
கோவையை மிரட்டும் காட்டு யானை : 4 பேர் பலியானதால் மக்கள் அச்சம்

கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த யானை தாக்கியதில் இதுவரை ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் பலியாகி உள்ளனர். போத்தனூர் கணேசபுரத்தில் இன்று காலை 6 மணிக்கு காட்டு யானை தாக்கி, வீட்டின் வெளியே படுத்திருந்த ஒரு சிறுமி மற்றும் மூதாட்டி பலியாகினர். முன்னதாக இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்ற ஜோதி, நாகரத்தினம் ஆகிய 2 பேரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.வனத்துறை எச்சரிக்கை : யானை ஊருக்கள் சுற்றுவதால் போத்தனூர், மதுக்கரை, சுந்தராபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். யானையை பிடிப்பதற்காக யானைகள் முகாமில் இருந்து 4 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை யானையை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தால், அதனை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் மற்றும் போலீசார் குழு போத்தனூரில் முகாமிட்டுள்ளது. போத்தனூரில் எட்டிமடை எம்.எல்.ஏ., சண்முகமும் நேரில் ஆய்வ செய்து வருகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.