Breaking News
மீண்டும் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ்: உரிமையாளர் பேட்டி

தீ விபத்தால் இடிக்கப்பட்ட அதே இடத்தில், மீண்டும் சென்னை சில்க்ஸ் உருவாக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: விபத்தில் சிக்கிய கட்டடத்தின் கட்டுமானத்தில் தெரிந்தே விதிமீறலில் ஈடுபடவில்லை. அப்போது எங்களுக்கு தேவையான அறிவுரையை யாரும் வழங்கவில்லை. விதிமீறல் தொடர்பாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, தீயணைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

அலட்சியம்:
தீயணைப்பு வீரர்களின் தாமதத்தால் நாங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணம் தீயில் கருகியது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் தேவையில்லாமல் 2 மணி நேரம் தாமதித்தனர். அவர்கள் தீயை அணைப்பதில் அலட்சியமாக இல்லாமல் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே தீயை அணைத்திருக்கலாம். அவர்கள் தாமதத்தால் கட்டடத்தையே தீ விழுங்கி விட்டது.

விதிமுறைகளுக்கு உட்பட்டு:

பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது. பாதுகாப்பான லாக்கர்களில் பாதுகாப்பாக இருந்தாலும், அதன் நிலை பற்றி தெரியவில்லை. கட்டட இடிபாடுகள் எடுக்கப்பட்ட பின்னர், இதே இடத்தில், விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனைத்து வசதிகளுடன் புதிய சென்னை சில்க்ஸ் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.