Breaking News
இனி போர்முனையில் பெண்கள்: ராணுவ தளபதி தகவல்

ஆயுதம் ஏந்தி போரிடும் பணியில், பெண்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ராணுவத்துக்கு பெண்களை தேர்ந்து எடுப்பதற்கான பணி விரைவில் தொடங்கும். முதலில் ராணுவ போலீஸ் படைக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். பிறகு பயிற்சி அளிக்கப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்படுவார்கள். இதுபற்றி அரசுடன் பேசி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் இன்ஜினியரிங், மருத்துவம், கல்வி, சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் மட்டுமே பெண்கள் பணியாற்றுகிறார்கள். போரிடும் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, சுவீடன், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ராணுவத்தின் போர்ப்படை பிரிவில் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஏற்கனவே விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக ராணுவத்தின் போர் முனையிலும் பெண்கள் பணி அமர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.