Breaking News
செஸ் போட்டியில் சசிகிரண் வெற்றி

கபாபிளான்கா நினைவு செஸ் போட்டியில் இந்திய வீரர் சசிகிரண் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கியூபாவில் உள்ள வரடேரோ நகரில் கபாபிளான்கா நினைவு செஸ் போட்டி நடைபெற்றது. 10 சுற்றுகளைக் கொண்ட இப்போட் டியின் கடைசிச் சுற்றில் இந்திய வீரரான சசிகிரண், கியூபாவின் இசான் ரெய்னால்டோவை எதிர் கொண்டார். இப்போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 10 சுற்றுகளின் இறுதியில் மொத்தம் 6.5 புள்ளிகளைப் பெற்ற சசிகிரண் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இப்போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இத்தொடரில் 5.5 புள்ளிகளைப் பெற்ற உக்ரைன் வீரரான வசிலி இவான்சுக் 2-வது இடத்தைப் பிடித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.