Breaking News
யாரேனும் எடுத்திருந்தால் தயவு செய்து கொடுத்திடுங்கள் கிறிஸ்கெய்ல் கேட்கிறார்

இங்கிலாந்தில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகளே விளையாட முடியும் என்பதால், ஒன்பதாவது இடத்தில் இருந்த மேற்கிந்திய தீவு அணி இந்த தொடரில் விளையாட முடியவில்லை.

இதனால் மேற்கிந்திய தீவு அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டிராகிராமில் ஒரு உதவி கேட்டுள்ளார்.

அதில் அவர் தன்னுடைய GoPro கேமிராவை தொலைத்து விட்டேன், இதனால் யாரேனும் அந்த கமெராவை எடுத்திருந்தால் தயவு செய்து காட்லிமேன் வீதியில் உள்ள கிராஞ்ஜ் ஓட்டலில் வந்து கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.