Breaking News
காஷ்மீரில் ஒரே நாளில் 6 முறை பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை தாக்குதல் நடத்தியதில் ஏராளமான இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நேற்று திடீரென பயங்கரவாதிகள் ராணுவ முகாம்கள், காவல்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியவற்றை குறிவைத்து அடுத்தடுத்த தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் ஹிஸ்புல் முஜாயீதீன் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலால் எல்லையில் பதற்ற நிலை உருவானது. இதில் 13 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை அமைதி காத்த இந்திய ராணுவத்தினர் பின்னர் பயங்கரவாதிகள் மீது சரமாரியாக பதிலடி கொடுத்தனர். அடுத்தடுத்து பயங்கரவாதிகள் 6 முறை தாக்கியதால் குப்வாரா, அனந்த்நாக் போன்ற மாவட்டங்களில் கடும் சண்டை மூண்டது. பயங்கரவாதிகளை அழிப்பதற்காக ஏராளமான படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.