Breaking News
லண்டன் அடுக்கு மாடி தீவிபத்து : பலியானோர் எண்ணிக்கை உயர்வு

லண்டன் தீவிபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக, இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள கிரன்பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்டமாக தெரியவந்தது. நேற்று வெளியான தகவலில் பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது.
ஆனால், தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் சோதனை செய்து வரும் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள
தகவலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.