Breaking News
இந்தியாவுக்கு 22 ட்ரோன்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒப்பந்தம்:

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. இதில், இந்திய கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்க, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எப்-16, எப்.,ஏ-18 ரக போர் விமானங்கள் மற்றும் சி-17 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.