Breaking News
எந்த நிபந்தனையும் இன்றி ஓ.பி.எஸ்., இணையலாம் : அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைப்பு

ஓ.பி.எஸ்., உட்பட எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி எங்களுடன் வரலாம்’ என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பழநி மலைக்கோயிலுக்கு வந்த அவர் கூறியதாவது: செய்தித்துறை சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டுவிழா 30 மாவட்டங்களிலும், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. நாளை (இன்று) மதுரையில் நடக்கிறது. சென்னையில் 2018 ஜன.,17ல் நுாற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில தலைவர்கள், மலேசியா, சிங்கப்பூர் உள்பட வெளிநாடு வாழ் தமிழர்களையும் அழைக்க உள்ளோம். இதில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட எம்.ஜி.ஆர்.,விசுவாசிகள் அனைவரும் கலந்துகொள்ளலாம். அவரை எந்தவித நிபந்தனையும் இன்றி எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இயக்கத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட அழைக்கிறோம். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிச்சாமி ஆட்சியை கலைக்க சட்டசபையில் பல குற்றச்சாட்டுகளை கூறி குழப்பம் ஏற்படுத்துகிறார். முதல்வர் ஆக நினைக்கும் அவரது பகல் கனவு பலிக்காது.
உண்மையான அ.தி.மு.க., நாங்கள் தான். 123 எம்.எல்.ஏ.,க்கள் 40க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். முதல்வர் பழனிச்சாமி ஆட்சி தொடர்வதில் எந்த ஆபத்தும் இல்லை”. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.