Breaking News
சிறை மருத்துவமனையில் நீதிபதி கர்ணனுக்கு சிகிச்சை

மேற்கு வங்க போலீஸாரால் கைது செய்யப்பட்ட, கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன், எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் சிறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கர்ணன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை இங்கிருந்து விடுவிக்க முடிவு செய்தோம். என்றாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.

சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது சிறை மருத்துவமனையில் இருக்கும் கர்ணனின் உடல்நிலையை மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்” என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எஸ்.கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து தலைமறைவான கர்ணன் கடந்த 20-ம் தேதி கோவை அருகே கைது செய்யப்பட்டார். மறுநாள் கொல்கத்தா பிரசிடென்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் சிறை மருத்துவமனையிலும் பின்னர் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையிலும் அனு மதிக்கப்பட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.