Breaking News
ஜெர்மனியில் 17 பேர் பலி?

ஜெர்மனியில், டிரைலர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான பஸ், தீப்பிடித்து எரிந்ததில், 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், பவேரியன் நகருக்கு அருகே, 46 பயணியர் மற்றும் இரண்டு ஓட்டுனர்களுடன் வந்த பஸ், டிரைலர் லாரி மீது பயங்கர வேகத்துடன் மோதியது. இதில், அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் சிக்கிய பயணியர், அலறி துடித்தனர். உடனடியாக, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 31 பேர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டனர். மீதமுள்ள, 17 பேர், தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.