Breaking News
மகளிர் குழுக்களுக்கு ரூ.8,000 கோடி கடன்

”ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், நடப்பாண்டில், 6,332 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்,” என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

• தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 800 கோடி ரூபாய் மதிப்பில், 3,500 கி.மீ.,
நீளமுள்ள, ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்
• பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2,659 கி.மீ., நீளமுள்ள, ஊரக சாலைகள் மற்றும், 25 உயர்மட்டப் பாலங்கள், 1,254 கோடி ரூபாய்
செலவில் மேம்படுத்தப்படும்
• மகளிர் சுய உதவி குழுவினர், தங்களின் உற்பத்தி பொருட்களை கண்காட்சி நடத்தி விற்க, ஊராட்சி அளவில், 1,000 இடங்களில், கூட்டமைப்பு கட்டடங்கள், 600 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்
• ‘துாய்மை பாரதம்’ இயக்கம் மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 26.49 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள், தலா, 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையில், 3,178 கோடி ரூபாயில் கட்டப்படும்
• மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அருகேயுள்ள, கிராம ஊராட்சிகளுக்கும், மலை பிரதேசங்களில் அமைந்துள்ள, கிராம ஊராட்சிகளுக்கும், அதிக மக்கள்தொகை உடைய, பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், 200 கோடி ரூபாயில், குப்பைத் தொட்டிகள்; 100 கோடி ரூபாயில், மூன்றுசக்கர சைக்கிள், தள்ளுவண்டிகள்; 200 கோடி ரூபாயில், மின் மோட்டார் மூலம் இயக்கப்படும் தள்ளுவண்டிகள் வழங்கப்படும்
• மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 7,000 கோடி ரூபாய், வங்கிக் கடன் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.