Breaking News
நேதாஜி உறவினர்களுக்கு மிரட்டல்: 6 பேர் கைது

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி உறவினர்களை மிரட்டிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா சாரட் போஸ் சாலையில் நேதாஜியின் உறவினர் சிஷிர் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணாபோஸ். முன்னாள் திரிணமுல் எம்.பி., மகன் சுகாதா போஸ். தற்போது திரிணமுல் சார்பில் எம்.பி., யாக உள்ளார். இவர்கள் வீடு மழை காரணமாக சேதமடைந்தது. அங்கு மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல், சிஷிர் போசிடம், வீட்டில் மராமத்து பணிகளுக்கு தேவையான பொருட்களை தங்களிடம் தான் வாங்க வேண்டும். இல்லையென்றால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக சிஷிர் போஸ், போலீசாருக்கு மொபைல் மூலம் புகார் அளித்தார். இதனை பார்த்த அவர்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள். யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது எனவும் மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல், இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றது. தொடர்ந்து போலீசார் அந்த கும்பலை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.