Breaking News
45 நாட்களில் 51 பயங்கரவாதிகள் ‛என்கவுண்டர்’

கடந்த 45 நாட்களில் எல்லையில் ஊடுருவிய 51 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது: புல்வாமாவில் ஊடுருவலில் ஈடுபட்ட இரண்ட பயங்கரவாதிள் எனகவுண்டர் செய்யப்பட்டனர். எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகள் உடன் துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 45 நாட்களில் எல்லையில் ஊடுருவிய 51 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, இந்திய ராணுவம் இரும்புக் கரம் கொண்டு முறியடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.