Breaking News
அணிகள் இணைப்பு ஓ.பி.எஸ்., கைவிரிப்பு

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை,” என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

அணிகள்,இணைப்பு,ஓ.பி.எஸ்., கைவிரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில நாட்களுக்கு முன் ஆட்டோவும், தனியார் பள்ளி பஸ்சும் மோதின. ஆட்டோவில் சென்ற கார்த்திகா, மகள் சகாந்தினி, உறவினர்கள்

கயல்விழி, கலையரசன், பலியாகினர். இறந்தவர் களின் வீட்டுக்கு நேற்று சென்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.

அப்போது நிருபர்கள்,’அ.தி.மு.க.,வின் இரு அணிக ளும் இணைவதற்கான பேச்சுக்கு வாய்ப்பு உள்ள தாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?’ என கேட்டனர். அதற்கு பன்னீர்செல்வம், ”எனக்கு எந்த தகவலும் வரவில்லை,” என பதில் அளித்தார்.

இணைப்பு பேச்சு நடக்கவில்லை: மறுக்கிறார் ‘நத்தம்’

பன்னீர்செல்வம்அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கலில் கூறியதாவது: அ.தி.மு.க., வின் இரு அணிகள் இணைவது குறித்து பேச்சு நடத்த குழு அமைத்துள் ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் தவறான

தகவல் களை கூறுகிறார்.அணிகள் இணைப்பு பேச்சு நடக்கவில்லை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார். முதல்வர் பழனிசாமி பேசுவதை அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள் கூட கண்டு கொள்வதில்லை. இவ்வாறு கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.