Breaking News
கடலூர் – காரைக்கால் மீனவர்கள் மோதல்: 16 பைபர் படகுகள் சிறைபிடிப்பு

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டி னம் பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் தினமும் கடலில் மீன் பிடிக்க 300 பைபர் படகுகளில் சென்று வருவார்கள். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல தேவனாம்பட்டினத்தில் இருந்து பைபர் படகில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். காரைக்கால் அருகே நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது கடல் சீற்றமாக இருந்த தால் மீன் பிடிக்க முடியாமல் அவதிப் பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த காரைக்கால் துறைமுக பகுதிக்கு கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் தங்களின் பைபர் படகுகளுடன் கரை திரும்பி உள்ளனர்.

அப்பகுதியில் ஏற்கெனவே காரைக்கால் மீனவர்களின் படகுகள் நிறுத்தப்பட்டிருந்ததால், கடலூர் மீனவர்களின் படகுகள், தங்களது படகுகளுக்கு இடையூறாக இருப்ப தாகவும், படகுகள் சேதம் அடைவ தாகவும் கூறி காரைக்கால் மீனவர் கள் தேவனாம்பட்டினம் மீனவர்களு டன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த செந்தில், சிலம்பு ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். இந்த தகராறில் கடலூர் மீனவர்களின் 6 படகுகளை காரைக்கால் மீனவர்கள் சிறைபிடித்து உள்ளனர். கடலூர் மீனவர்கள் நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று காரைக்கால் கடற்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் 10 பைபர் படகுகளை, கடலூர் மீனவர்கள் தேவனாம்பட்டினத்துக்கு இழுத்து சென்று வைத்துள்ளனர்.

மீனவர் தாக்கப்பட்டது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் கடலோர காவல் படை மற்றும் காவல் நிலையத்தில் கடலூர் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.