Breaking News
மேலும் ஒரு உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இந்தியா விருப்பம்

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் நடக்கிறது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கான 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த ஆர்வமாக இருப்பதாக இந்திய கால்பந்து சங்கம் சார்பில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) போட்டிகள் கமிட்டியிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை இந்திய கால்பந்து சங்க தலைவர் பிரபுல் பட்டேல் நேற்று தெரிவித்தார். இது இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.