Breaking News
” 70 ஆண்டு காத்திருந்தோம்” -மோடி குறித்து இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்

இந்திய பிரதமர் எங்களின் நாட்டிற்கு வருவதற்கு நாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என இந்திய பிரதமர் மோடி குறித்து இஸ்ரேல் பிரதமர் பெருமிதமாக பேசினார். இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் தென்யாஹூ வரவேற்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் பெஞ்சமின் நெதன்யாஹூ பேசியதாவது:இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்திய கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகம், எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பிரதமர் மோடி எனது நண்பர், அவரை வரவேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது. மிகச்சிறந்த பெரும் மற்றும் நல்ல தலைவர்களில் ஒருவர் மோடி. மேக் இன் இந்தியா என்பதுடன் நாங்கள் , மேக் வித் இந்தியா என இருக்கிறோம். நமது உறவுக்கு வானம் எல்லை இல்லை. இன்னும் நமது உறவுகள் விரிவாக்கம் பெறும். இவ்வாறு பெஞ்சமின் பேசினார்.

இளம் நாடு இந்தியா; மோடி

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு இங்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது இஸ்ரேல் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரேல் பழமையான கலாச்சார நாடாக இருந்த போதிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொண்டது. இளம் நாடு இந்தியா. இஸ்ரேல் வந்தது குறித்து பெருமை அடைகிறேன். பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களிலிருந்த நாடுகளை பாதுகாக்க வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்ரேல் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியான நாடு. இரு நாடுகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.