Breaking News
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. கைதான 8 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் தமிழக மீனவர்களின் இரு படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

படகு மூழ்கடிப்பு:

இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிக்கப்பட்டது. இதில் சிக்கி கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.