சிறப்பாக செயல்படாத அதிகாரிகளுக்கு 50 வயதில் ஓய்வு : உ.பி. அரசு அதிரடி
உத்தரபிரதேச அரசு நிர்வாகத்தில் சரிவர பணியாற்றாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கும் அறிவிப்பை உ.பி., புதிய தலைமைச்செயலாளர் ராஜிவ்குமார் வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது அரசு அலுவலகங்களை பார்வையிட்டு பணிகளை சரிவர செய்யாத அதிகாரிகளுக்கு அவ்விடத்திலேயே தண்டனையும் அளித்து வருகிறார்.
அதிரடி
அந்தவகையில், இம்மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சரிவர செயல்படாத அதிகாரிகள், 50 வயது மற்றும் அதை கடந்தவராக இருப்பின் அவர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான அறிவிக்கையும், தலைமைச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாதையில் உ.பி. அரசு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுநலனை கருத்தில் கொண்டு சிலதுறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 50 ஆக குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி., அரசு, அதற்கான நடவடிக்கைகளில் தற்போதே துணிச்சலுடன் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச அரசு நிர்வாகத்தில் சரிவர பணியாற்றாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கும் அறிவிப்பை உ.பி., புதிய தலைமைச்செயலாளர் ராஜிவ்குமார் வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது அரசு அலுவலகங்களை பார்வையிட்டு பணிகளை சரிவர செய்யாத அதிகாரிகளுக்கு அவ்விடத்திலேயே தண்டனையும் அளித்து வருகிறார். அதிரடி அந்தவகையில், இம்மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சரிவர செயல்படாத அதிகாரிகள், 50 வயது மற்றும் அதை கடந்தவராக இருப்பின் அவர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான அறிவிக்கையும், தலைமைச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதையில் உ.பி. அரசு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுநலனை கருத்தில் கொண்டு சிலதுறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 50 ஆக குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி., அரசு, அதற்கான நடவடிக்கைகளில் தற்போதே துணிச்சலுடன் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.