Breaking News
புதுச்சேரியில் கவர்னர் மாளிகை முற்றுகை

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்., சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடையடைப்பு போராட்டத்தின் போது, புதுச்சேரியில் இருந்து சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கவர்னர் மாளிகைக்கு சென்ற இளைஞர் காங்., அமைப்பினர், மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு வருகின்றனர். கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி கோஷமிட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.