Breaking News
இன்றும், நாளையும் மழை தொடரும்

தென் மேற்கு பருவமழை காரணமாக, வங்க கடலை ஒட்டியுள்ள சென்னை, காஞ்சிபுரம்
மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மேகங்கள் கூடி மழை பெய்து வருகிறது. மூன்று நாட்களாக, மாலையில் துவங்கும் மழை, அதிகாலை வரை மழை பெய்கிறது.
இந்த மழை, இன்றும், நாளையும் நீடிக்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும், ௧௫ம் தேதி முதல், காற்று வீசும் திசையில் மாறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், வட கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8.30 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக, எண்ணுார் மற்றும் செம்பரம்பாக்கத்தில், 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், பூந்தமல்லி, ௭; திருவள்ளூர், சென்னை விமான நிலையம், ௬; பொன்னேரி, அரக்கோணம், காஞ்சிபுரம், திண்டிவனம், சோழவரம், தாமரைப்பாக்கம், ௫; திருவள்ளூர் – பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, ௪; செங்கல்பட்டு, ஆவடி, வந்தவாசி, ஆரணி, பரங்கிப்பேட்டை, உத்திரமேரூர், செஞ்சி, மாதவரம், ௩ செ.மீ., மழை

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.