Breaking News
நேதாஜி விமானத்தில் உயிரிழக்கவில்லை:பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்

1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஆவணம் வெளியிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. தைவான் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் ஆவணங்கள் வெளியிட்டது. அந்த ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

எந்த சான்றும் இல்லை

நேதாஜி மரணம் தொடர்பான ரகசிய ஆவணம் ஒன்றை பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தில் தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தது நேதாஜிதான் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் மோரே, தனது ஆவணத்தில் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.