Breaking News
சிறைத்துறை அதிகாரிகள் மாற்றம்: கைதிகள் போராட்டம்

பெங்களூரு சிறை சசிக்கு சிறப்பு சலுகை வழங்கியதாக புகார் கூறிய டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா மற்றும் சிறைத்துறை அதிகாரி கிருஷ்ணா குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். சிறைத்துறை அதிகாரியாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூரு சிறையில் டி.ஐ.ஜி., ரூபாவுக்கு ஆதரவாக ஒரு சில கைதிகளும், கிருஷ்ண குமாருக்கு ஆதரவாக ஒரு சிலகைதிகளும் காலை உணவை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சிறையில் பரபரப்பு நிலவுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.