Breaking News
சுனந்தா மர்மச்சாவு; சாமியால் சூடு பிடிக்கிறது

முன்னாள் மத்திய அமைச்சர் மனைவியான சுனந்தா புஷ்கர் சாவில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சை தற்போது சுப்பிரமணிய சாமியால் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சசி தரூரின் மனைவி சுனந்தா கடந்த 2014 ஜனவரி 17ம் தேதி டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். இந்த சாவு இயற்கையானது அல்ல என சந்தேகம் கிளம்பியது. இது தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் வேகமாக இருந்தது. ஆனால் இடையில் கிடப்பில் போடப்பட்டது.

இது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் சாமி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்படுவதாகவும், காலம் தாழ்த்தும் பட்சத்தில் நீதி கிடைக்காது என்றும் வழக்கை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் சாமி மனுவில் கோரினார்.

இந்த மனுவை கோர்ட் இன்று ஏற்று கொண்டது. சுனந்தா வழக்கில் போலீசின் விசாரணை அறிக்கையை 3 நாட்களுக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.