Breaking News
விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு

புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 20 ரூபாய் நோட்டுகளை போல், புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும். எஸ் வரிசையில் அமையவுள்ள இந்த நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும். புதிய நோட்டுகள் அறிமுகமானாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லுபடியாகும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.