Breaking News
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , வீடு, அலுவலகங்களில் கடந்த ஏப். 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் ஏற்கனவே விஜயபாஸ்கர்,மனைவி, சகோதரர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் கடந்த ஏப். 7-ம் தேதி கைப்பற்றப்பட்ட ஆணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்திட நாளை (ஜூலை 21-ம் தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.