Breaking News
‛ஆர்.கே.நகரில் கமல் போட்டியிட்டால் நான் போட்டியிட மாட்டேன்’: பொன்.ராதா

‛ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால் நான் போட்டியிடமாட்டேன்’ என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கமல் என்ன சிந்தனையுடன் பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஆர்.கே.நகரில் கமல் போட்டியிட்டால் தனிப்பட்ட நபராக நான் போட்டியிடமாட்டேன். தி.மு.க., ஆட்சிக்கு வர நினைத்து ஏதாவது ஒரு கொடியை பிடித்து தொங்கி மேலே வர பார்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.