Breaking News
சசிகலா விவகாரத்தில் முதல்வர் மவுனமாக இருப்பது ஏன் ? : ஸ்டாலின் கேள்வி

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு அனுமதி என்பது இந்த அரசு, பாஜக ‘எள்’ என்றால் ‘எண்ணெய்’ ஆக இருப்பதையே காட்டுகிறது.பிரதமர் டில்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல்,ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களை சந்திப்பது வேதனையளிக்கிறது. பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேவை பற்றி துளியும் கவலைப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கும் அரசு, ஆந்திர அரசுடன் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சென்னைக்கு கிடைக்க வேண்டிய 12 டிமெ்சி கிருஷ்ணா நீரை பெறவில்லை என தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனை விமர்சிப்பதில் அதிமுகவும், பாஜ.,வும் இணைந்துள்ளதன் மூலம் அவர்களின் ரகசிய கூட்டணி வெளிப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.