Breaking News
வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை பெய்யும் -சென்னை வானிலை மையம்

சென்னையில் இன்று மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது, வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

இலங்கைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது இலங்கை மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும்.அதிகபட்சமாக பொன்னேரியில் 10 செ.மீ, கடலூரில் 9 செ.மீ மழை பதிவானது

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கன மழையைப் பொறுத்த வரை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும். வட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யும். ஓரிரு முறை வலுவான மழை பெய்யும் என்று அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.