Breaking News
அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து என வெளியான செய்திக்கு வடகொரியா மறுப்பு
வடகொரியாவின் 6-வது அணு ஆயுத சோதனையானது பலரது உயிரை பறித்துவிட்டது என வெளியான செய்தியை வடகொரியா அரசு ஊடகம் மறுத்து உள்ளது, இது தவறான தகவல் என தெரிவித்து உள்ளது.
வடகொரியா கடந்த மாதம் ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த பின்னர் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டது, இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என ஜப்பானின் அஷாகி டிவி செய்தி வெளியிட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ள வடகொரியா ஊடகம், இவ்விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகள் தவறானவை, எங்களுடைய நாட்டிற்கு எதிராக அவதூறு பரப்புவதற்கான செய்தி. வடகொரியா அணு ஆயுத மேம்பாட்டில் நவீன நிலையில் உள்ளது என தெரிவித்து உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.