Breaking News
இத்தாலி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழப்பு
லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் நேற்று நடந்தது. லிபியாவில் இருந்து சில படகுகளில் ஏராளமானோர் புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது படகுகளின் என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் படகுகள் கடலில் மூழ்கின. அப்போது அங்கு ரோந்து வந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அவர்களில் 700 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், மத்திய தரைக்கடலில்  இருந்து 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் மட்டும் கடல் பகுதி வழியாக இத்தாலிக்கு 111,000 பேர் வந்துள்ளனர் என்று இத்தாலி உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.