Breaking News
ஐதரபாத்தில் பிச்சைக்காரர்கள் பிச்சையெடுக்க தடை
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவான்டிகா டிரம்ப் ஆகியோர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு நவம்பர் மாதம் 28-ம் தேதி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐதராபாத் காவல்துறை ஆணையர் எம்.மகேந்தர் ரெட்டி கூறுகையில்,
அரசு அறிவிப்பின் படி,  பிச்சை எடுப்பது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பொது ஒழுங்கை பாதிக்கிறது. பொது இடங்களில் பிச்சை எடுப்பது தடைவிதிக்கப்பட்டுள்ளது. வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 வரை நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் பிச்சை எடுப்பது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.