Breaking News
ஜி.எஸ்.டி வரிமுறையை புரிந்து கொள்ள முடியவில்லை: அமைச்சர் பேச்சால் பாஜகவுக்கு தர்ம சங்கடம்
மத்தியப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே, ஜி.எஸ்.டியை இதுவரை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியிருப்பது பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கலந்துக் கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தம்மால் இதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை என்று கூறினார். மேலும், ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குக் கூட சிரமம் இருப்பதாக  தெரிவித்தார். ஓம் பிரகாஷின் இத்தகைய பேச்சு, பாரதிய ஜனதா கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.