Breaking News
தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பி.கள் திடீர் பணியிடமாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  மதுரை தெற்கு மண்டல டி.எஸ்.பியாக இருந்த கலை செல்வன், சென்னை நுண்ணறிவு பிரிவுக்கும், சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இருந்த சுஷில்குமார், சென்னை சென்ட்ரல் ரயில்வே டி.எஸ்.பியாகவும், சென்னை சென்ட்ரல் ரயில்வே டி.எஸ்.பியாக இருந்த குணசேகரன், அண்ணா நகர் உதவி கமிஷனராகவும், அண்ணா நகர் உதவி கமிஷனராக இருந்த சந்திரசேகரன், சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், கிண்டி உதவி கமிஷனராக இருந்த  சுப்பிரமணி, திருச்சி ரயில்வே டி.எஸ்.பியாகவும், மதுரை உதவி கமிஷனராக இருந்த முத்துகுமார், சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும், விருத்தாச்சலம் டி.எஸ்.பியாக இருந்த ஈஸ்வரன், தாம்பரம் உதவி கமிஷனராகவும், தாம்பரம் உதவி கமிஷனராக இருந்த லோகநாதன், சென்னை கட்டுபாட்டு அறை உதவி கமிஷனராகவும், சென்னை கட்டுபாட்டு அறை உதவி கமிஷனராக இருந்த தேவராஜ் பல்லாவரம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, பல்லாவரம் உதவி கமிஷனராக இருந்த விமலன், வேப்பேரி உதவி கமிஷனராகவும், வேப்பேரி உதவி கமிஷனராக இருந்த வினோத் சந்தாரம், ராயப்பேட்டை உதவி கமிஷனராகவும், ராயப்பேட்டை உதவி கமிஷனராக இருந்த கவிகுமார், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பியாகவும், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பியாக இருந்த  முத்துகுமார், சென்னை மனித உரிமை மற்றும் சமூக நீதி உதவி கமிஷனராகவும்,  சென்னை மனித உரிமை மற்றும் சமூக நீதி உதவி கமிஷனராக இருந்த அழகேசன், எம்.கே.பி நகர் உதவி கமிஷனராகவும்,  எம்.கே.பி நகர் உதவி கமிஷனராக இருந்த அன்பழகன், திருநெல்வேலி ரயில்வே டி.எஸ்.பியாகவும், கன்னியாகுமாரி அமலாக்கத்துறை டி.எஸ்.பியாக இருந்த குமார், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராகவும், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த தொல்காப்பியன், சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கும், சென்னை கட்டுபாட்டு அறை உதவி கமிஷனராக இருந்த அசோகன் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.

மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த தேவநேசன், திருச்சி மனித உரிமை டி.எஸ்.பியாகவும், காஞ்சிபுரம் என்.ஐ.பி. சிஐடியாக இருந்த பொன்ராம் நிலம் அபகரிப்பு சிறப்பு பிரிவு உதவி கமிஷனராகவும்,நிலம் அபகரிப்பு சிறப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் பயிற்சி மைய டி.எஸ்.பியாகவும், சென்னை சிஐடி, செக்கியூரிட்டி பிரிவு டி.எஸ்.பியாக இருந்த முத்துமாணிக்கம், வில்லிவாக்கம் உதவி  கமிஷனராகவும், வில்லிவாக்கம் உதவி  கமிஷனராக இருந்த ஜெய சிங், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி  கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி  கமிஷனராக இருந்த விஜயராமன், விழுப்புரம் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பியாகவும், மதுரை  குற்ற ஆவண காப்பகம் உதவி  கமிஷனராக இருந்த  பாலமுருகன், சென்னை மக்கள் தொடர்பு  உதவி  கமிஷனராகவும், மாற்றப்பட்டுள்னர். இதேபோன்று, சென்னை மக்கள் தொடர்பு உதவி  கமிஷனராக இருந்த முருகதாஸ், கடலூர் மனித உரிமை மற்றும் சமூக நீதி டி.எஸ்.பியாகவும், சென்னை எஸ்.ஐ.டி, சிபிசிஐடியாக இருந்த விஷ்ணு, சென்னை ஆன்டி வைஸ் அணி உதவி  கமிஷனராகவும், ஆன்டி வைஸ் அணி உதவி  கமிஷனராக இருந்த அகஸ்டீன் பால் சுதாகர், சென்னை பயிற்சி மைய டி.எஸ்.பியாகவும்,  வேலூர் டி.எஸ்.பியாக இருந்த சந்திரசேகரன், சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி  கமிஷனராகவும், சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி  கமிஷனராக இருந்த அனந்தராமன், சைதாப்பேட்டை உதவி கமிஷனராகவும்,  சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி  கமிஷனராக இருந்த கபிலன், ஈரோடு டி.எஸ்.பியாகவும், மதுரை டி.எஸ்.பியாக இருந்த குருசாமி,  வண்டலூர் டி.எஸ்.பியாகவும், வண்டலூர் டி.எஸ்.பியாக இருந்த அண்ணாதுரை,  சிசிஐடபில்யூ சிஐடி டி.எஸ்.பியாகவும்,  சென்னை எஸ்.ஐ.யூ, எஸ்.பி.சிஐடி டிஎஸ்பியாக இருந்த சுப்புராஜ், மாமல்லபுரம் டிஎஸ்பியாகவும், சென்னை ஒ.சி.ஐ.யூ டிஎஸ்பியாக இருந்த முகமது அஸ்லாம், காஞ்சிபுர மாவட்டம் அமலாக்கத்துறை பிரிவு டிஎஸ்பியாகவும்,  காஞ்சிபுரம் மாவட்டம் அமலாக்கத்துறை டி.எஸ்.பியாக இருந்த கண்ணப்பன், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, கோயம்புத்தூர் ரயில்வே டிஎஸ்பியாக இருந்த  குமரேசன்,  சென்னை கியூ பிரிவு சிஐடி  டிஎஸ்பியாகவும், சென்னை கியூ பிரிவு சிஐடி  டிஎஸ்பியாக இருந்த உன்னிகிருஷணன், லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பியாகவும்,  நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பியாக இருந்த அரசு சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பியாகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு  டிஎஸ்பியாக இருந்த அசோக் மேத்தா, தஞ்சாவூர்  அமலாக்கத்துறை டி.எஸ்.பியாகவும்,  வீராபுரம் 3வது பட்டாலியன் டிஎஸ்பியாக இருந்த  ராஜ்குமார், சென்னை குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், கடலூர் டி.எஸ்.பியாக இருந்த அருள் சந்தோஷ் முத்து, சென்னை கியூ பிரிவு சிஐடி டி.எஸ்.பியாகவும்,  சென்னை எஸ்சி, எஸ்டி விஜிலென்ஸ் பிரிவு டி.எஸ்.பியாக இருந்த வெற்றி செழியன், மதுரை குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பியாகவும்,  சென்னை மனித உரிமை ஆணைய  டிஎஸ்பியாக இருந்த தியாகராஜ், பூந்தமல்லி டிஎஸ்பி 13வது பட்டாலியன் டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் டிஸ்பியாக இருந்த கார்த்திக், தமிழ்நாடு போலீஸ் அகடாமி டிஎஸ்பியாகவும், நீலகிரி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த பஞ்சாச்சரம், காஞ்சிபுர மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் என்பிஐ, சிஐடி டிஎஸ்பியாக இருந்த ரவிக்குமரன் சென்னை சிஐயூ டிஎஸ்பியாகவும், காத்திருப்பு பிரிவு(தலைமை அலுவலகம்) டிஎஸ்பியாக இருந்த கண்ணன் பட்டாபிராம் உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.