Breaking News
பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி மோடி மற்றும் டிரம்ப் ஆலோசனை

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் ஆசியன் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தகத்தினை ஊக்குவித்தலுக்கான வழிகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் போன்ற பிற விவகாரங்களுடன் இரு நாடுகளின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய விசயங்கள் இடம்பெற்றன.

டிரம்ப் கடந்த சனிக்கிழமை வியட்நாமில் நடந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த தலைமை செயல் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்பொழுது, 100 கோடி மக்கள் தொகையுடன் நல்லிணக்க ஜனநாயகம் கொண்ட மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியாவை என புகழ்ந்து கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.