Breaking News
பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடி, சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகள் தொடர்பாக நேற்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அவர், அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.

அப்போது அவர் கிராமப்புறங்களில் சாலைகளை அமைக்கிறபோது, அவையும், அவற்றின் தரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குகிறபோது, அவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில், உலக தரத்தை நிதி ஆயோக் அமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.