Breaking News
விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை பூனேவில் கைது!!

பிரபலமில்லாத தமிழ் பட நாயகி ஒருவர் பூனேவில் உள்ள விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸார் அவரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் வாடா செல்லம். இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், கரோலின் நாயகியாகவும் நடித்தனர்.

இந்த தமிழ் படத்தில் மட்டுமின்றி ஆடை விளம்பரங்களிலும், நகை கடை விளம்பரங்களிலும் நடித்துள்ளார் கரோலின். இந்நிலையில், பூனேவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்த பூனே போலீஸார் கரோலினை அங்கு கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விபச்சாரத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்டதாக கூரப்படுகிறது.

இதற்கு முன்னர் தமிழ் நடிகைகள் இவ்வாறு விபச்சார வழக்கில் சிக்கியுள்ள நிலையில், மேலும் இது போன்ற ஒரு நிகழ்வு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.