Breaking News
இலங்கை அணியின் கேப்டனாக திசரா பெரேரா நியமனம்

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் டிசம்பர் 2–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை நடக்கிறது. டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும் இரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 10–ந் தேதி தர்மசாலாவிலும், 2–வது ஒருநாள் போட்டி டிசம்பர் 13–ந் தேதி சண்டிகாரிலும், 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 17–ந் தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இலங்கை ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக திசரா பெரேரா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் அவர் இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடருக்கும் கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.