Breaking News
மல்லையா சொத்துக்களை ஏப். 2018-ம் வரை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏப்ரல் 2018 வரை முடக்க லண்டன் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு லண்டன் தப்பியோடினார். லண்டன் தப்பியோடிய மல்லையாவை நாடு கடத்தி கொண்டுவர வெஸ்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் இ்ந்தியா முயற்சி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் 13 வங்கிகள் சார்பில் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 2018 ஏப். 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் அதுவரை மல்லையா சொத்துக்களை முடக்கிவைத்தவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் மற்றொரு வழக்கின் விசாரணை வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோட்டில் டிசம்பர் 20-ம் தேதி நிறைவடைகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.