Breaking News
தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது

இலங்கை கடற்படையினர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களின் 2 நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர்.

அந்த படகுகளை அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

கடந்த ஜூலை 8ந்தேதி தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி எல்லை கடந்து மீன்பிடித்தனர் என குற்றச்சாட்டு எழுப்பி மண்டபம் பகுதி அருகே 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.