Breaking News
தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சென்னை வரவிருந்த ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தம்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பிற மாவட்டங்களில் இருந்தும் ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.