Breaking News
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 20-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக கடந்த 13-ந் தேதி அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து இருந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 20-ந் தேதி நடைபெற இருந்த செயற்குழு கூட்டத்தை தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைத்துள்ளதாக அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

20-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.

கட்சி செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு தவறாமல் வருகைதந்து, செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.